செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு என நாடகம்?

Jun 30, 2021 12:53:20 PM

துரையில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த ஒரு வயது குழந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி போலி ஆவணங்கள் மூலம் புதைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதயம் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா என்பவரின் ஒரு வயது குழந்தை மாணிக்கத்திற்கு கடந்த 11ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், திடீரென குழந்தை இறந்துவிட்டதாக கூறி தாய் ஐஸ்வர்யா முன்னிலையில் மயானத்தில் புதைத்துள்ளனர்.

இதனையறிந்த ஐஸ்வர்யாவை இல்லத்தில் சேர்த்துவிட்ட சமூக ஆர்வலர், குழந்தை குறித்து தொண்டு நிறுவனத்திடம் கேட்டபோது முறையாக பதிலளிக்காத நிலையில் குழந்தையை புதைத்தது தொடர்பான ஆவணங்கள் போலியாக இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், ஆதரவற்றோர் இல்லத்தின் நிறுவனர் சிவக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில் கொரோனா பாதித்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே சட்டவிரோதமாக குழந்தை விற்க்கப்பட்டுவிட்ட நிலையில் உயிரிழந்துவிட்டதாக நாடகம் நடத்தப்படுகிறதா என்ற கோணத்திலும் குழந்தை நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement