கடந்த ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் நிகழ்வை தொடங்கி வைத்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்களான இராயப்பேட்டை பெசன்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.