செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானாவை சேர்ந்த மேலும் ஒரு கொள்ளையன் கைது

Jun 26, 2021 09:46:58 PM

ஸ்பிஐ வங்கியின் டெபாசிட் எந்திரத்துடன் கூடிய ஏடிஎம் மைய கொள்ளை வழக்கில் ஹரியானாவை சேர்ந்த  மேலும் ஒரு கொள்ளையனை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களுடன் கூடிய எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து நூதன முறையில் சுமார் ஒரு கோடி வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களில் உள்ள சென்சார் எப்படி வேலை செய்கிறது என்ற நுட்பத்தை பயன்படுத்தி, பல்வேறு ஏடிஎம்களில் சிறுகச் சிறுக பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதிலும், ஜப்பானை சேர்ந்த ஓ.கே.ஐ (OKI) என்ற நிறுவனம் தயாரித்த டெபாசிட் எந்திரங்களை இந்த சைபர் கொள்ளையர்கள் குறிவைத்துள்ளனர். ஹரியானாவில், சைபர் குற்றங்களின் தலைநகர் எனப்படும் மேவாட் பகுதியை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர்.

"மேவாட்" கொள்ளை கும்பலை சேர்ந்த, அமீர் அர்ஸ் என்பவன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, தற்போது போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறான்.

அவன் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹரியானாவில் வீரேந்தர் என்ற மற்றொரு கொள்ளையனையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவனையும் சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

இதனிடையே இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த 2 குழுக்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒரு குழுவின் தலைவன் பெயர் சதக்கத்துல்லாகான் என்பதும் இரு குழுக்களையும் சேர்ந்த சுமார் 30 பேர் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. ஹரியானா அதிரடிப்படை போலீசார் 50 பேர் இந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக, தமிழக போலீசாருக்கு உதவி செய்து வருகின்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement