செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்..!

Jun 26, 2021 10:38:07 AM

மிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள அனுமதிகளுடன் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகள் குளிர் சாதன வசதி இல்லாமல் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது. வழிபாட்டு தலங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அர்ச்சனை, திருவிழா மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேப்போல, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு குழுமங்கள் செயல்படவும், திறந்தவெளியில் பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஏடிஎம் மைய சேவைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளில் செயல்படுவோர் இ பதிவில்லாமல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மின்பணியாளர்கள், பிளம்பர்கள் மற்றும் கணிணி பழுது நீக்கம் செய்யும் பணியாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வீடுகளுக்கு சென்று இ- பதிவு இன்றி பணிபுரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத நபர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement