செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

போதையில் ஆபாசப் பேச்சு... லத்தியால் தாக்கிய போலீஸ்..! இறப்பினால் பரபரப்பு

Jun 23, 2021 05:51:30 PM

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மது போதையில் தன்னுடன் வாக்குவாததில் ஈடுபட்ட நபரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் லத்தியால் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகின.

இந்த நிலையில், போதையில் இருந்த அந்த நபர் மருத்துவமனையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கருமந்துறை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருமந்துறை மலைப்பகுதிக்குச் சென்று மது அருந்தி வருவதும் உண்டு.

அந்த வகையில் எடப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் அவருடைய நண்பர்கள் இருவரும் நேற்று கருமந்துறை சென்று மது அருந்திவிட்டு பைக்கில் வந்துள்ளனர்.

மூவரையும் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் மடக்கிய போலீசார், ஒரே இருசக்கர வாகனத்தில் வந்ததாலும் மது அருந்திவிட்டு வந்ததாலும் வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது போதையில் இருந்த முருகேசன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் போலீசாரை ஆபாசமாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் பொறுமை இழந்த , ஏத்தாப்பூர் உதவி ஆய்வாளர் பெரியசாமி, லட்டியால் முருகேசனை தாக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் போதையில் இருந்த முருகேசன் மயக்கமடைந்ததால் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.

உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கியதில்தான் அவர் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம்சாட்டும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் விசாரணை மேற்கொண்டார். 

இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கியதால்தான் முருகேசன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதம் செய்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement