செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி..! தடுத்தவரை கொன்ற கொடூரம்

Jun 19, 2021 12:50:26 PM

திருவாரூர் அருகே பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற 4 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.  சிக்கிய ஒரு கொள்ளையனை மீட்க மற்ற கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கூடூர் என்ற இடத்தில் SBI வங்கியின் ATM உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த ATMக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு கொள்ளையர்கள், அதனை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

ஏடிஎம் இயந்திரத்தை பெயர்க்கும் முயற்சியின் போது எழுந்த சப்தம் கேட்டு எதிர் வீட்டில் இருந்தவர் பார்த்து ATM கட்டிடத்தின் உரிமையாளர் தமிழரசன் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு போனில் தகவல் கொடுத்து, ரோந்து சென்ற காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வெளியே வரவே கொள்ளையர்கள்  4 பேரும் அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களில் இருவர் திருத்துறைப்பூண்டி நோக்கியும், இருவர் திருவாரூர் நோக்கியும் தப்பித்து சென்றனர்.

இதனிடையே கட்டிடத்தின் உரிமையாளர் தமிழரசன் ரோந்துக் காவலர்களுடன் கொள்ளையர்கள் இருவரை விரட்டியுள்ளார்.

அப்போது பைக்கை போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிக்க முயற்சித்தபோது கொள்ளையர்களில் ஒருவன் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் சிக்கிய நிலையில் மற்றொருவன் தப்பி ஒடிவிட்டான்.

இதனைத் தொடர்ந்து பிடிபட்ட கொள்ளையனிடம் காவலர்களும், தமிழரசன் மற்றும் பொதுமக்கள்  சேர்ந்து விசாரித்து கொண்டிருந்தனர்.

அப்போது, திருத்துறைப்பூண்டி சாலையில் ஓடிய கொள்ளையர்கள் இருவர் பயங்கர ஆயுதங்களோடு திரும்பி வந்து தங்களின் இருசக்கர வாகனத்தால் காவலர்கள் மீது மோதியுள்ளனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் மிரண்டு ஓட, இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்த கொள்ளையன் தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் போலீசாரைக் குத்த முயன்றுள்ளான். அப்போது குறுக்கே நின்ற தமிழரசனின் இடதுபக்க மார்பில் அந்த ஆயுதம் குத்திக் கிழித்துள்ளது.

இதில் இதயத்தில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக தமிழரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதற்குள், இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இந்நிலையில் காவலர்களிடம் சிக்கிய கொள்ளையனைப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவன் பெயர் மதன் என்பதும், லட்சுமாங்குடியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தடயவில் துறையினரும் சோதனை செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 16 ஆம் தேதி நள்ளிரவு கொள்ளை முயற்சி நடந்த ATM  அருகாமையில் இருந்த கந்தன் வெல்டிங் பட்டறையில், வெல்டிங் சிலிண்டருக்கு பயன்படும் குழாய், ரெகுலேட்டர், கட்டிங் மெஷின் போன்றவை திருட்டுபோனது.

அந்தப் பொருட்களைக் கொண்டே இந்தக் கொள்ளை முயற்சி நடந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தப்பி ஓடிய கொள்ளையர்கள் 3 பேரையும் துரிதமாக செயல்பட்டு சில மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement