செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கொரோனா நிவாரணமாக மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Jun 03, 2021 01:14:46 PM

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதியின் 2-ம் தவணையாக 2ஆயிரம் ரூபாய், 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 900 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கொரோனா நிதியின் முதல் தவணை 2ஆயிரம் ரூபாய் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 4196 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை 2ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கலைஞர் பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 2-வது தவணை கொரோனா நிதிக்காக மேலும் 4196 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடை மூலம் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, ரவை, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படவுள்ளது. இதற்காக 844 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ஏற்கனவே அறிவித்தபடி 14ஆயிரம் கோயில் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக தலா 4ஆயிரம் ரூபாய் நிவாரணமும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், மருத்துவர்கள், மருத்துவ பணியளர்கள், காவலர்கள், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் நிதியுதவியும் வழங்கும் திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement