செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ரேசனில் 14 வகை பொருட்கள் வழங்கும் திட்டம்.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

Jun 03, 2021 11:09:26 AM

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்து நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடைகள் மூலம் ஜூன் மாதம் முதல் வழங்கிட கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதன்படி, 2 கோடியே 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம்பருப்பு, புளி, கடலைப்பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்தூள், குளியல் சோப்பு, துணி சோப்பு, துணிப்பை ஆகிய 13 பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட உள்ளன. தற்போது இதனுடன் 14 வது பொருளாக டீத்தூள் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த முன்னிட்டு, மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று துவக்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, 5ஆம் தேதி சனிக்கிழமை முதல் நியாயவிலை கடைகள் வாயிலாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று கடந்த 1ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களின் பூசாரிகள், பட்டாச்சாரியர்கள் போன்றோருக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 15 வகை மளிகை பொருட்கள், 10 கிலோ அரிசி போன்றவற்றை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். மேலும் மாவட்டத்திற்கு ஆயிரம் மரக்கன்றுகள் என்ற வகையில் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement