செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அள்ளிக் கொடுத்த போலீஸ் தம்பதி.. பசியாற்றும் சேவை..!

May 20, 2021 07:00:58 AM

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே போலீஸ் ஏட்டு தம்பதியர் தங்கள் மாத ஊதியம் மற்றும் சேமிப்பில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து ஆதரவற்ற முதியோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறிகளை வாங்கிக் கொடுத்து உதவியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் சரகத்துக்கு உள்ளிட்ட விளாம்பட்டி காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டாக உள்ள செல்வரத்தினமும், அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ள அன்பழகன் ஆகிய இருவரும் தான் ஆதரவற்றோரின் பசியாற்ற உதவிய போலீஸ் தம்பதியர்...

இவர்கள் இருவரும் தங்கள் மாத ஊதியம் மற்றும் சேமிப்பில் இருந்து சிறிய தொகையை எடுத்து தங்கள் பகுதியில் செயல்பட்டுவரும் ஆதரவற்ற முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உள்ளவர்களுக்கு ஒரு மாதம் உணவளிக்க முடிவு செய்தனர். அதன் படி அந்த காப்பகத்திற்கு தேவையான 25 கிலோ எடை கொண்ட 10 மூட்டை அரிசி, பருப்பு , சர்க்கரை, மசாலா பொருட்கள், காய்கறிகள் வாழைபழங்கள் போன்றவற்றை லோடு வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று வழங்கினர்

மனவளர்ச்சிக்குன்றியோர் பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவ மாணவியருக்கு முககவசங்களை வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

இருப்பவர் இல்லாதோருக்கு கொடுக்க வேண்டும் என்ற மனிதாபிமானத்துடுன் நடந்து கொண்ட போலீஸ் தம்பதியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. அதே நேரத்தில் கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கால் தங்கள் இல்லத்துக்கு பிறந்த நாளில் தேடிவந்து உதவும் உள்ளங்கள் வெளியில் வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் இல்ல முதியோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு உதவி தேவைப்படுவதாக கூறியதும் போலீஸ் தம்பதியர் ஒருமாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கியதாக தெரிவித்த அந்த இல்ல நிர்வாகி ஏஞ்சல், இவர்களை போல மனித நேயம் கொண்டவர்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதில் தானே இன்பம் இருக்கின்றது என்பதை உணர்ந்த உன்னத மனிதர்கள் உலகில் உள்ளவரை எவர் ஒருவரும் பசியோடு உறங்க செல்லவேண்டியதில்லை..!


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement