செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நிரம்பும் மருத்துவமனைகள்..! காத்திருக்கும் நோயாளிகள்...

May 18, 2021 02:41:08 PM

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கைகள் அனைத்து நிரம்பியுள்ளன.

இதனால் சிகிச்சைக்காக நோயாளிகள் மருத்துவமனைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவையில் புதிதாக வரும் நோயாளிகளுக்கு பேருந்துகளில் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பிய நிலையில், 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட ஜீரோ டிலே எனப்படும் சிறப்பு வார்டும் நிரம்பியது.

அதன் காரணமாக புதிதாக வரும் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி கொண்ட இரண்டு பேருந்துகள் செயல்பாட்டுக்கு வந்துள்ள்து. அதன் மூலம் பேருந்து இருக்கைகளில் அமர வைத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பின.

மருத்துவமனையில் உள்ள 150 சாதாரண படுக்கைகள், 325 ஆக்சிஜன் படுக்கைகள், மற்றும் அவசர சிகிச்சை பிரிவில்  உள்ள 50 படுக்கைகளும் நிரம்பின. இதனால் மருத்துவமனை வளாகத்திலேயே சிகிச்சை பெற நோயாளிகள் காத்திருக்கின்றனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்ட படுக்கைகளும் நிரம்பின. மருத்துவமனையில் உள்ள 200 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பிய நிலையில் கூடுதலாக 10 படுக்கைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் 210 படுக்கைகளும் நிரம்பியதால் மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் வாகனங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பாண்டூர் பகுதியில் கூடுதலாக ஆக்சிஜன் வசதி கொண்ட 54 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பின.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 113 ஆக்சிஜன் படுக்கைகளும், முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 360 ஆக்சிஜன் படுக்கைகளும் முழுமையாக நிரம்பி விட்டன.

இதனால் புதிதாக சிகிச்சைக்காக வருவோருக்கு மருத்துவமனை வாசலிலேயே ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 8-வது நாளாக அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன.

மருத்துவமனையில் உள்ள 370 சாதாரண படுக்கைகள் மற்றும் 270 ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால் புதிதாக சிகிச்சை பெற வருவோர் மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.

இதனிடையே காஞ்சிபுரத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement