செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

24 மணிநேரமும் கொரோனா நோயாளிக்கு உதவிடும் வார் ரூம்..!

May 12, 2021 10:23:23 AM

கொரோனலா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள்,  ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை, வெண்டிலேட்டர் வசதி, இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசு சார்பில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் வார் ரூம் எனப்படும் கட்டளை மையம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதித்த நோயாளிகள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே, தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை 24 மணிநேரமும் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வார் ரூமில் மருத்துவ பணியாளர்கள்,
கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொற்று பாதித்தவர்கள், 104 சேவை எண்ணை தொடர்பு கொள்ளும் போது, வார் ரூம் ஊழியர்கள், நோயாளியின் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, நாடி துடிப்பு, எந்த பகுதியில் நோயாளி உள்ளார் உள்பட அனைத்து தகவல்களையும் முழுமையாக பெற்று, அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பிவைக்கின்றனர்.

மேலும், ஆம்புலன்சில் உள்ள அவசரகால உதவியாளர் மூலம் நோயாளியின் உடல் நிலையை கண்டறிந்து, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உதவியுடன், உடனடியாக அருகில் உள்ள சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு, வாட்ஸ் ஆப் மற்றும் 104 மருத்துவ உதவி மையம் மூலம் தகவல் கொடுத்து அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை, அதிக பட்சமாக அரை மணி நேரத்திற்குள்ளாகவே, செய்து வருகின்றனர்.

கால் வெயிட்டிங் தடை இல்லாமல் ஒரே நேரத்தில் 30 நபர்கள் வரை தொடர்பு கொள்ளும் வகையில் 104 எண் செயல்படுவதாகவும், தமிழகத்தில் எந்த பகுதியாக இருந்தாலும், அழைப்பு வந்த அரை மணி நேரத்திற்கு உள்ளாகவே நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதாகவும் கட்டளை மையத்தின் ஊழியர் ரூபிதா., வார் ரூம் ஊழியர் தெரிவித்தார்.

இதனிடையே, டிஎம்எஸ் வளாகத்தில தேசிய சுகாதார திட்ட அலுவலகத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தாரீப் அகமது பங்கேற்ற இந்த கூட்டத்தில் வார் ரூம் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும், கொரோனா நோயாளிக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட உதவிகளை உடனுக்குடன் செய்து தர துரிதமாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement