செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..! அதிசயிக்க வைத்த ஆசிரியர் தம்பதி

Apr 22, 2021 10:51:59 AM

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே, 74 வயது தமிழ் ஆசிரியரின் மனைவி, தனது கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த கணமே உயிர்விட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளையோருக்கு முன் உதாரணமாக அன்றில் பறவைகளாய் ஒன்றிவாழ்ந்த ஆசிரியர் தம்பதி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

காற்றுபுகக் கூட இடம் கொடுக்காமல் காதல் மொழி பேசி திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் கூட வேலைக்கு செல்லும் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் குடும்பத்துடன் கோர்ட்டு படியேறி விவாகரத்து பெற்று பிரிவது தற்போதைய தலைமுறையின் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் முன் பின் அறிமுகம் இல்லாமல் திருமணத்தன்று இருமனதால் இணைந்த 70 வயதை கடந்த தம்பதியர், சாவிலும் கூட பிரியாத அதிசயம் தென்காசி அருகே நிகழ்ந்துள்ளது .

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குலசேகரன் கோட்டையை சேர்ந்த 74 வயதான தமிழாசிரியர் சண்முகவேல். இவரது மனைவி ஜி ஜி பாய் அரசு பள்ளியில் இடை நிலை ஆசிரியைகாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

50 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணத்தால் இணைந்தனர் ஆசிரியர் சண்முகவேல், ஆசிரியை ஜி.ஜி.பாய் தம்பதியினர். கணவன் மனைவியின் அன்புக்கு அடையாளமாய் மூன்று ஆண்குழந்தைகளை பெற்றெடுத்து அதில் மூத்த மகனை தலைமை ஆசிரியராக உயர்த்திய இந்த தம்பதி. தனது 2 வது மகனுடன் சொந்த கிராமத்திலும், 3 வது மகன் தர்மபுரியிலும் வசித்து வந்தனர். பேரன் பேத்தி எடுத்த நிலையிலும் மனைவி ஜிஜி பாய் மீது மாறாத அன்பை கொண்டிருந்தார் சண்முகவேல்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சண்முக வேல் திடீரென செவ்வாய்கிழமை மரணமடைந்தார். சண்முக வேல் இறந்த செய்தியை கூறினால் தாய் ஜிஜி பாயின் உடல்நிலையும் பாதிக்கப்படக்கூடும் என்று கருதி மகன்கள் அவரிடம் கூறாமல் தவிர்த்துள்ளனர்.

அதிகாலையில் தங்கள் வீட்டுக்கு ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்ததை கண்ட ஜிஜி பாய் மகனிடம் என்ன விஷயம் என்று கேட்க மகன்கள், தந்தையின் இறப்பை மறைத்துள்ளனர். ஆனாலும் நிலைமையை புரிந்து கொண்ட ஜி ஜி பாய் அவர் என்னை விட்டு போய் விட்டாரா? என்று அலறியபடியே பெரு மூச்சு வாங்கி தரையில் சாய்ந்துள்ளார். அடுத்த கணம் சம்பவ இடத்திலேயே ஜிஜி பாய் பரிதாபமாக உயிரை விட்டதால் அவர்களது மகன்களும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வாழும் போது மனைவியை அன்பாக பார்த்துக் கொண்டது போல, சாகும் போதும் கூட பிரிய மனம் இல்லாமல் மனைவியை தன்னோடு அழைத்துச்சென்று விட்டாரோ ? என்று உறவினர்கள் கதறி அழுதனர். இந்த இணை பிரியா மரணங்கள் குலசேகரன்கோட்டை கிராமத்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊரில் உள்ளோர் வந்து இருவருக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்

கண்டதும் காண்டாகும் இளையதலைமுறை தம்பதியினருக்கும், கண்டதுக்கு எல்லாம் சண்டையிடும் இல்லத்தரசிகளுக்கும், குடிப்பதையும் மனைவியை அடிப்பதையும் கொள்கையாக கொண்ட குடிகார கணவன்மார்களுக்கும், இல்லறம் என்றால் என்ன என்பதை அன்றில் பறவைகளாய் வாழ்ந்து காட்டிச்சென்றுள்ளனர் இந்த ஆசிரியர் தம்பதியினர்..!


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement