செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Apr 18, 2021 12:38:09 PM

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேதாரண்யம் அடுத்த கத்தரிபுலம் பகுதியில் அனுமதி இல்லாமல் கலவை மணலை சிலர் எடுத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் கத்தரிபுலம் பகுதியில் தனிப்படையை சேர்ந்த டீன் மற்றும் வெற்றிவேல் என்பவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது கலவை மணலை ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று வந்துள்ளது.

அதனை வழிமறித்த தனிப்படை போலீசார் மணல் எடுத்து செல்வது குறித்தும் அனுதி பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது ஓட்டுநர் வீரமணி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

பின்னர் மணல் நிரப்பப்பட்ட டிராக்டரை அருகில் உள்ள கரியாப்பட்டினம் காவல்நிலையத்திற்கு எடுத்து வர எண்ணிய தனிப்படை காவலர் டீன் டிராக்டரை ஓட்ட, அவருடன் சக போலீசார் வெற்றிவேல் அமர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காவல்நிலையம் நோக்கி டிராக்டர் சென்று கொண்டிருந்த போது சாலையில் திடீரென வழிமறித்து நின்ற மூன்று பேர் தங்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை காவலர்கள் மீது தூக்கி வீசினர்.

பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் காவலர் டீனுக்கு கை மற்றும் கால் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. உடனிருந்த வெற்றிவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இருவருக்கும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மணல் எடுத்து செல்லப்பட்ட டிராக்டர் கரியாப்பட்டினத்தை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமானது என்றும், அவர் திருட்டுத்தனமாக மணலை கடத்தி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

பின்னர், ஓட்டுநர் வீரமணியை கைது செய்த போலீசார், டிராக்டர் உரிமையாளர் சக்தி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement