செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழில் அதிபர்..! இளைஞருடன் சிக்கிய மனைவி

Apr 10, 2021 08:53:50 AM

திருப்பூரில் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால், கால் முறிந்த கணவனை ஆம்னி வேனில் வைத்து உயிரோடு எரித்து கொலை செய்ததாக விசைத்தறிபட்டறை உரிமையாளரின் மனைவி, உறவுக்கார இளைஞருடன் போலீசிடம் சிக்கி உள்ளார். 3 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி செய்த கொடூர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பூர் அருகேயுள்ள துடுப்பதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ரங்கராஜன். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தவருக்கு கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, காலில் முறிவு ஏற்பட்டு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஓரளவு குணமடைந்த நிலையில் வீட்டில் ஓய்வெடுப்பதாக கூறி ரங்கராஜனை அவரது மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜா ஆகியோர் திங்கட்கிழமை இரவு கோவையிலிருந்து துடுப்பதிக்கு ஆம்னி காரில் அழைத்து சென்றுள்ளனர். வீட்டுக்கு செல்லும் வழியில் பெருமாநல்லூர் பகுதியில் காரை நிறுத்திய ராஜா, இறங்கி சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

திரும்பி வந்த ராஜா, காரை ஸ்டார்ட் செய்யும் பொழுது, காரிலிருந்து புகை வந்ததாகவும், அப்போது திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் ரங்கராஜனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை அவர் தீயில் சிக்கி காருடன் எரிந்து விட்டார் என்று போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கார் எரிந்தது விபத்து அல்ல திட்டமிட்ட கொலைச் சம்பவம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. ரங்கராஜின் மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

ரங்கராஜ் தனது சொந்த ஊரான துடுப்பதியில் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீடு ஒன்றினை கட்டியுள்ளார். வீடு கட்டுவதற்காகவும், தொழில் நிமித்தமாகவும் தெரிந்தவர்களிடம், ஒன்றரை கோடியளவில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதனை திருப்பிக் கொடுக்காத நிலையில், நாளடைவில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

விபத்தில் சிக்கி நடக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட வேதனையில் ரங்கராஜன் மனைவி ஜோதிமணியிடம் கடன் தொல்லை அதிகளவில் இருப்பதால், நீ என்னை காருடன் தீவைத்து எரித்து கொன்றுவிட்டால், விபத்தில் நான் இறந்து விட்டேன் என்று யாரும் உனக்கு கடன் கேட்டு தொல்லை தர மாட்டார்கள் என்று கூறியதாகவும், தனது கணவர் பேச்சை கேட்டு அவர் விருப்பபடியே மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி காருடன் சேர்த்து தீவைத்து எரித்து கொன்றதாக மனைவி ஜோதிமணி தெரிவித்துள்ளார். இதற்கு உதவியாக உறவினர் ராஜா இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ராஜாவிடம் விசாரித்த போது தனக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ஜோதிமணி கூறியதால் உதவியதாக தெரிவித்துள்ளார். மேலும் தொழில் அதிபர் ரங்கராஜன் தனது பெயரில் 3 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்திருந்ததாகவும் அதனை பெற வேண்டும் என்ற ரகசிய திட்டத்துடன், விபத்து போன்றதொரு இந்த கொலையை ஜோதிமணி திட்டமிட்டு செய்திருக்க கூடும் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர், ஜோதிமணி, ராஜா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

ரங்கராஜின் மகன்கள் இருவரும் கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படிப்பை முடித்துவிட்டு ஒருவர் அமெரிக்காவிலும், இன்னொருவர் ஷேர் மார்க்கெட் தொழிலும் செய்து வருவதால் கடன் தொல்லை தவிர்த்து இந்த கொலைக்கு பின்னணியில் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை
தரக்குறைவாகப் பேசியதால் தாக்குதல்.. பெட்டிக்கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement