முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய ஆ.ராசா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். அதில் அவர் பயன்படுத்திய சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய அதிமுகவினர், தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.