செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? -மு.க.ஸ்டாலின் கேள்வி

Mar 26, 2021 01:17:16 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும், நகரங்களிலும் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு அரசுத் தரப்பில் 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆலந்தூர், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கினார்களா? வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா என கேள்வி எழுப்பினார்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக மத்திய அரசை விமர்சித்த ஸ்டாலின், தான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் உருவாக்கிய தொழிற்சாலைகள் பற்றிக் குறிப்பிட்டார். தொழில்முனைவோருக்கு நம்பிக்கை இல்லாததால்தான் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. காப்பியடித்துவிட்டதாக புகார் தெரிவித்த ஸ்டாலின், சென்னையில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த வெள்ளத்தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்றும், நகரின் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

சென்னையில் ஏரிகள் தூர்வாரப்படும், நன்மங்கலம் ஏரியில் படகுசவாரி, ஓ.எம்.ஆர். சாலையில் அரசுப் பொது மருத்துவமனை, கண்ணகி நகரில் பாலிடெக்னிக் கல்லூரி, சோழிங்கநல்லூரில் இருந்து ஒக்கியம் மடுவுவரை மழைநீர் கால்வாய் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement