செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கொரோனா காலத்தில் மூடப்பட்ட ஆலைகள் மீண்டும் செயல்பட ரூ.15000 கோடி நிதி ஒதுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

Mar 24, 2021 06:02:53 AM

கொரோனா காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுமென மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த உடன், பெட்ரோல், டீசல் விலை உடனடியாக குறைக்கப்படும் என்றும், அவர் உறுதியளித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, சூளகிரி ரவுண்டானா பகுதியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

நான் ரெடி, நீங்க ரெடியா என கேட்டு உரையைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டம் தந்த உரிமையில் வாக்கு கேட்டு வந்ததாக குறிப்பிட்டார்.

கொரோனா காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட 15000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் தொழில் வளம் பெருக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் உதவிக்கரம் நீட்டப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் வீதி வீதியாக நடந்து சென்று, வியாபாரிகள், சிறு கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து, பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

சேலம் கோட்டை மைதனாத்தில், சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement