செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகம் - புதுச்சேரியில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

Mar 22, 2021 06:06:41 AM

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் போட்டியிட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீது பொது பார்வையாளர் மேற்பார்வையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் நேற்று முன்தினம் பரிசீலனை நடைபெற்றது.
இவற்றில் 2727 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 4515 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட 23 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாதவர்கள் தங்களது வேட்புமனுக்களை இன்று மாலை 3 மணிக்குள் வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 234 தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் வழங்கப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு மாலையில் தனி சின்னம் ஒதுக்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 486 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 81 மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஏற்கப்பட்ட 405 பேரில் வாபஸ் பெறுவோரின் முடிவுக்குப் பின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement