செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

லாரி வைத்திருக்கும் ஒரு ஏழை விவசாயிக்கு போராட உரிமையில்லையா ? தமிழகத்துக்குள் ஊடுருவிய பின்னணி

Mar 13, 2021 06:51:29 AM

விவசாயிகள் எனக்கூறி கன்னியாகுமரியில் சைக்கிள் பேரணியை தொடங்க முயன்ற ஹரியானவை சேர்ந்தவர்களை, சுற்றிவளைத்து தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.  கண்டெய்னர் லாரியில் சைக்கிள்களுடன் தமிழகத்திற்குள் ஊடுருவிய விவசாய போராட்ட குழுவின் மாஸ்டர் பிளான் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் 100 நாட்களை கடந்தும் டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் கவனம். விவசாயிகள் போராட்ட களத்தில் இருந்து திசைமாறி தேர்தல் களத்தை நோக்கி திரும்பியுள்ளது.

இந்த நிலையில் பாரதீய கனதா கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள, போராட்டகுழுவை சேர்ந்த சிலர் ஒரு கண்டெய்னர் லாரியில் ஏராளமான உணவு பொருட்கள் மற்றும் சைக்கிள்களுடன் கன்னியாகுமரிக்குள் நுழைந்துள்ளனர்.

அங்கு சட்டமன்ற தேர்தலுடன் நடக்கவிருக்கின்ற நாகர்கோவில் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை எதிர்த்து சைக்கிள் பேரணியாக சென்று பிரசாரத்தை முன் எடுத்ததாக கூறப்படுகின்றது. இதற்கு அங்குள்ள பாஜக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அனுமதியின்றி சைக்கிள் பேரணி செல்வது தெரியவந்தது. மேலும் விவசாயிகள் என்ற பெயரில் ஹரியானாவை சேர்ந்த சிலரை டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர் கண்டெய்னர் லாரியில் அழைத்து வந்து வீதியில் களமிறக்கி விட்டு அதனை வீடியோ பதிவு செய்து கொண்டிருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி போலீசுக்கு சவால் விட்டது போல நம்ம ஊர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் போலீசார் அவர்களை ஒவ்வொருவராக கைது செய்து வேனில் ஏற்றினர். இறுதியாக அவர்களை அழைத்து வந்த டிப்டாப் உடையணிந்த ஈவெண்ட் மேனஜரும் கைது செய்யப்பட்டார்

பேரணி செல்ல எடுத்து வந்த அனைத்து சைக்கிள்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் ஆதாயம் அடையும் திட்டத்துடன், தேர்தல் நடத்தை விதியை மீறி அனுமதியின்றி நடத்தப்பட இருந்த பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள் அல்ல, மண்டி நடத்துவோர் என்று பா.ஜ.க தரப்பில் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஈவெண்ட் மேனேஜர் உதவியுடன் கன்னியாகுமரிக்கு லாரியில் வந்து போராட்டம் நடத்தும் இவர்கள் எப்படி ஏழை விவசாயிகளாக இருக்க முடியும் என்ற கேள்வி அங்கிருந்த மக்களிடையே எழுந்துள்ளது..!

பொங்கலோ, போராட்டமோ எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அது அசவுகரியமாகி விடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்


Advertisement
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement