செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்.! உடன்பாடு காண்பதில், திமுக ஜரூர்.!

Mar 11, 2021 09:35:22 AM

திமுக கூட்டணியில், மதிமுக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இறுதி செய்து அறிவித்தார்.

இதன்படி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு, கடையநல்லூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும், ஐ.யூ.எம்.எல் வேட்பாளர்கள் ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணி தொகுதிகள் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர். இதன்படி, மதிமுகவுக்கு, மதுராந்தகம், வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர், மதுரை தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். இந்த 6 தொகுதிகளிலும், மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கின்றனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியுடன் திமுக உடன்பாடு எட்டிய நிலையில், உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்கியது. அதில், பார்வர்டு பிளாக் தலைவர் கதிரவன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஆதித் தமிழர் பேரவை கட்சிக்கு அவிநாசி தொகுதியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். இதில், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை கட்சிக்கு, நிலக்கோட்டை தனித் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, உதயசூரியன் சின்னத்தில், அக்கட்சி போட்டியிடுகிறது.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினருடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 தொகுதிகளில், 4 தொகுதிகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறினார். எஞ்சிய 2 தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை, வியாழக்கிழமை மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்றார்.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியினரோடு, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அன்றைக்குள் இறுதி செய்யும் முடிவில் திமுக முனைப்புக் காட்டுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. இவை ஒருபுறம் இருக்க, திட்டமிட்டவாறு இன்று தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிடுவதில், திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement