செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மருத்துவ கழிவுகளால் குப்பை மேடாக மாறி வரும் தீர்த்தவரி கடற்கரை... சுகாதார சீர்கேட்டால் கலங்கும் சுற்றுலாப் பயணிகள்!

Mar 10, 2021 01:11:22 PM

மரக்காணம் அருகே உள்ள தீர்த்தவரி கடற்கரை பகுதிகளில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்று வட்டார பகுதி மக்கள் அதிகம் விரும்பி செல்லும் கடற்கரை தீர்த்தவரி கடற்கரை ஆகும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பங்களுடன் வரும் சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரையில் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக கழித்துவிட்டு செல்வார்கள்.

சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகைதரும் தீர்த்தவரி கடற்கரையில் சமீபகாலமாக அதிகளவில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடற்கரையே மருத்துவ கழிவுகள் நிறைந்த குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு வரும் மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தீர்த்தவரி கடற்கரையில் புல்வெளிகள் அதிகம் இருப்பதால் மேய்ச்சலுக்காக இந்த பகுதியிலுள்ள மக்கள் தங்கள் கால்நடைகளை இங்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். மருத்துவ கழிவுகள் காரணமாக ஒன்றும் அறியா கால்நடைகளும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. மூட்டை மூட்டையாக கொட்டப்படும் பிளாஸ்டி, கண்ணாடி மருத்துவக்கழிவுகள் எரியூட்டப்படுவதால், சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் கொட்டப்படும்  மருத்துவ கழிவுகள் யாரால் கொட்டப்படுகிறது என்பது கேள்வி குறியாக உள்ளது. இந்த மருத்துவக் கழிவுகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமானதா அல்லது ஏதேனும் தனியார் கிளினிக் வைத்திருப்பவர்கள் கொட்டி வருகிறார்களா என்பது தெரியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்லும் கடற்கரையில் இவ்வாறு அலட்சியமற்று செயல்படும் மருத்துவ நிர்வாகம் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Advertisement
ஒரே நாளில் 3 சிறுவர்களைக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்
கோவையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ பாப்பம்மாள்: வானதி
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல புதிய நடைமுறை
சுருளி அருவிக்கு அருகே நடைபெறும் சாரல் விழா 2024 - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!
செந்தில் பாலாஜி அன்று ஊழல்வாதி, இன்று தியாகியா..? : எச்.ராஜா கேள்வி
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு
பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்..!
அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. சோதனையில் வசமாக சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்

Advertisement
Posted Sep 28, 2024 in Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement