செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மும்பை டீரா போல கோவையில் 8 மாத குழந்தை பாதிப்பு... ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி வாங்க உதவி கிடைக்குமா?

Mar 04, 2021 09:39:17 PM

மும்பை குழந்தை டீரா போல முதுகுதண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த 8 மாத பெண் குழந்தையை குணப்படுத்த ரூ16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், குழந்தையின் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.

கோவையை அடுத்துள்ள போத்தனூர் அம்மன்நகர் 3-வது வீதியை சேர்ந்த அப்துல்லா - ஆயிஷா தம்பதிக்கு ஸீஹா ஜைனப் என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. அப்துல்லா பால் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் வருகிறார். குழந்தை ஸீஹா ஜைனப்புக்கு Spinal Muscular Atrophy எனப்படும் அரிய வகை நோயால் பாதிப்பு உள்ளது. இதனால், அந்த குழந்தைக்கு நரம்புகள் செயல்படாமல், தசைகள் இயக்கம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. குழந்தை ஒரு வருடம் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தையை காப்பாற்ற குழந்தையின் உடலில் மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரபணு ஊசி செலுத்தினால் மட்டுமே இந்த குழந்தையை குணப்படுத்த முடியும் .

அமெரிக்காவில் கிடைக்கும் இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் ரூ. 16 கோடி ஆகும். இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது எப்படி என்று குழந்தை ஜைனப்பின் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர். தன்னார்வ அமைப்புகள் மூலம் நிதி உதவியை கேட்டு வரும் குழந்தையின் பெற்றோர், மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு மருத்து கிடைக்க உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த, ஐந்து மாதக் குழந்தை, டீராவுக்கு வெளிநாட்டில் இருந்து மருந்து வாங்குவதற்காக ரூ. 6 கோடி இறக்குமதி வரி மற்றும் ஜி.எஸ்.டி. வரியை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டீராவின் பெற்றோர் crowd funding வழியாக 16 கோடி நிதி திரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement