சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், எவ்வித ஆவணமும் இன்றி கொண்டுவரப்பட்ட 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து பினாக்கினி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வந்த பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் சிறப்பு படையினர் சோதனையிட்டனர்.
அப்போது கூடூரில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 4 லட்சத்தி 18 ஆயிரத்தி 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.