செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மேக்கப் போட சென்ற மணப்பெண் மாயம்... திருமணம் நின்றதால் நஷ்ட ஈடு கேட்கும் மணமகன்!

Mar 03, 2021 12:03:10 PM

பூந்தமல்லி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக மேக்கப் போடச் சென்ற மணப்பெண் தப்பி ஓடியதையடுத்து பெண் வீட்டார் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த வாலிபருக்கும், மதுராந்தகத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மத்தத்துடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் இறங்கினர். 

மார்ச் 2 ஆம் தேதி மாலை நசரத்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், மறுநாள் காலை திருமணமும் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், மணமகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்திதுக்கு வந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் பெண் வீட்டிலிருந்து மணப்பெண்ணும், பெண் வீட்டாரும் வராததால் சந்தேகமடைந்த மாப்பிள்ளை வீட்டார், அவர்களை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனர். 

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகு நிலையத்துக்கு  சென்ற மணப்பெண் மாயமாகி விட்டதாகவும், அவரை தேடி கொண்டு இருப்பதாக மணமகள் வீட்டார்  தெரிவித்தனர். இதனைக் கேட்ட மணமகன் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். மேலும் இந்த தகவலை பெண்வீட்டார் தாமதமாக தெரிவித்ததால் , திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரக்கூடிய உறவினர்களுக்கு தயார் செய்து வைத்திருந்த உணவுகள் எல்லாம் வீணாகிப் போனது.

இதனையடுத்து திருமண மண்டபத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர்களை மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் கிழித்தெறிந்தனர். மதிருமண ஏற்பாடு செய்து நின்று விட்டதால் பெண்வீட்டார் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement