செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

குளிர்ச்சி தரும் பனை நார் கட்டில்... மீண்டும் இயற்கைக்கு திரும்பும் ராமநாதபுரம் மக்கள்

Feb 26, 2021 10:04:11 PM

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கட்டில்களை தவிர்த்து மீண்டும் பனை நார் கட்டில் பயன்பாட்டிற்கு பொதுமக்கள் மாறி வருவது அதனை தயாரித்து வரும் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

"கற்பக விருட்சம்" என்று அழைக்கப்படும் பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனைமரத்தின் வேர் பகுதி முதல் உச்சி பகுதி வரை பல்வேறு பயன்கள் நிறைந்து காணப்படுகிறது. அதிலிருந்து பதநீர், நுங்கு, கிழங்கு என உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. பனை மரத்தடிகள் வீடுகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர பனைமரத்தின் ஓலை, மட்டை என அதன் அனைத்து பாகங்களுமே கைவினைப் பொருட்கள், பெட்டி, பாய், கட்டில் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன. அதிலும் குறிப்பாக, பனைமட்டை நாரிலிருந்து பின்னப்படும் கட்டில் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

பச்சை பனை ஓலையை வெட்டி அதன் மட்டையிலிருந்து உரித்து எடுக்கப்பட்ட நாரை நீரில் ஊற வைத்து பின்னப்பட்ட கட்டில்களை முன்பெல்லாம் பல வீடுகளில் காணமுடிந்தது. தற்போது நாகரீக மோகத்தால் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் கட்டில்களின் பயன்பாடு அதிகரித்ததால் நார் கட்டில்களின் பயன்பாடு சுருங்கிவிட்டது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் நார் கட்டில் கட்டும் தொழிலில் பனைத் தொழிலாளர்கள் பலர் பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அதன் பயன்களை அறிந்த பலரும் மீண்டும் பாரம்பரிய பழமைவாய்ந்த பனை நார் கட்டில்களுக்கு மாறி வருகின்றனர்.

இதுகுறித்து நார்க்கட்டில் பின்னும் தொழிலாளி பாண்டியன் கூறும்போது, பனைமரத்தின் மட்டையிலிருந்து நார் எடுத்து அதை பதப்படுத்தி தண்ணீரில் ஊறவைத்து பின் வடிவமைத்து, கட்டில், ஊஞ்சல் சேர், டிரைவர் சீட், உள்ளிட்ட தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்துகிறோம். கடந்த காலங்களில் அதிகம் பயன்பட்டுவந்த பனை நார் கட்டில் பின்னர் நாகரீகம் கருதி தவிர்த்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பனை நார் கட்டில்களை செய்ய ஆர்டர் கொடுக்க இந்த பகுதி மக்கள் முன்வருகின்றனர். எனவே, இதன் மூலம் ஓரளவு நிரந்தர வருமானம் கிடைப்பதாகவும் கூறுகிறார் பாண்டியன்.

உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் அளிக்கக் கூடிய பனை நார் கட்டிலின் மகத்துவத்தை யாராலும் மறுக்க முடியாது. இன்றும் சாயல்குடி போன்ற ஒரு சில கிராமங்களில் பனை நார்களை கொண்டு கட்டில்களை பின்னும் தொழிலில் ஈடுபட்டு, பல குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. எனவே பனைமரங்களை பாதுகாத்து, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பனை நாரில் பின்னப்பட்ட கட்டில்களை மக்கள் பயன்படுத்தினால், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் குடும்பங்களின் எதிர்கால வாழ்வு ஒளிமயமாகும். அதே நேரத்தில் வரும் கோடைக்காலத்தில் கொளுத்தும் வெயில் சூட்டில் இருந்து தப்பித்துக் கொள்ள சிறந்த முதலீடாகவும் அமையும் என்பதும் மறுக்க முடியாத உண்மை


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement