செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை... நடுவழியில் வாகனங்கள் நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி!

Feb 22, 2021 12:42:21 PM

செங்கல்பட்டு அருகே எத்தனால் கலந்த பெட்ரோல் போடப்பட்ட வாகனங்கள் நடுவழியிலேயே நின்றதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் ’தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பதாக’ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்துவிட்ட நிலையில், வாகன ஓட்டிகளுக்கு மற்றொரு பிரச்னையாக வந்துள்ளது எத்தனால் கலப்பு. சுற்றுச் சூழலைக் காக்கும் முயற்சியாக பெட்ரோலுடன் 10 சதவிகிதம் எத்தனால் கலந்து விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இந்த உத்தரவுப்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளன. 

எத்தனால் கலந்த பெட்ரோல் போடும்போது, பெட்ரோல் டேங்கில் சிறிதளவு தண்ணீர் சென்றாலும் அது 10 சதவிகித எத்தனாலை தண்ணீராக மாற்றிவிடும் என்பதால், வாகனங்களைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும் என்று பெட்ரோலியத்துறை சார்பில் பொதுமக்களுக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் வேண்டுகோள் விடப்பட்டது.

இந்த சூழலில் தான், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் பெட்ரோலிய பங்கில் ஒருவர் தன் காருக்கு 1000 ரூபாய்க்குப் பெட்ரோல் போட்டுள்ளார். சிறிது தூரம் சென்றதும் உடனே கார் நின்று விட்டது. இதைப் போலவே வேறொருவரின் வாகனமும் நடுவழியில் நின்றது. இது குறித்து, கார் ஓட்டுநர் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்ட போது முறையான பதில் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக பெட்ரோல் பங்க் நிர்வாகியிடம் கேட்டபோது, “தற்போது வரும் பெட்ரோல்களில் எத்தனால் கலந்து வருவதால் வாகனத்தைக் கழுவும் போது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் படாமல் கழுவ வேண்டும் எனவும், அப்படித் தவறுதலாக தண்ணீர் பட்டால் இதுபோன்று வாகனங்கள் பாதி வழியிலேயே நின்று விடும்” என்றும் கூறினார். மேலும், தங்களிடம் உள்ள பெட்ரோலை பரிசோதனை செய்து விட்டதாகவும், அதில் தண்ணீர் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்ததையடுத்து, பெட்ரோலியத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மறு உத்தரவு அறிவிக்கும் வரை இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது..!


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement