செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திசை மாறிய இளைஞர்கள்... திசை திருப்பிய இன்ஸ்பெக்டர்... குவியும் பாராட்டுகள்!

Feb 18, 2021 08:22:57 PM

ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் பல்வேறு குற்ற சம்பவம் நடக்கக்கூடிய பிளாக் ஸ்பாட் பகுதி இருக்கும். அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் அறியா பருவத்தின் போது செய்யும் தவறுகளை திருத்தி, அவர்களுக்கு தேவையான நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால், அவர்களே தங்களை தயார் செய்து கொள்வார்கள் என்பதற்கு உதாரணமாக, சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு மேற்கொண்ட நடவடிக்கைகளை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியானது, காவல் துறையினரால் முழுவதுமாக கண்காணிக்க கூடிய வகையில் பிளாக் ஸ்பாட் பகுதியாக இருந்து வந்தது. இந்த பகுதியை சேர்ந்த ஒருசில இளைஞர்கள், அறியா பருவத்தின் போது செய்யும் தவறுகளினால் அவர்களது வாழ்க்கை திசை மாறியது. இதுகுறித்து கேள்விப்பட்ட சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு, தினம்தோறும் நமச்சிவாயபுரத்திற்கு சென்று, பொதுமக்களை சந்தித்து வந்தார். திசை மாறிய இளைஞர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்தக் கூடிய யோகா, உடற்பயிற்சி, நூலகம், இசை, விளையாட்டு ஆகியவற்றை ஏற்பாடு செய்ய முடிவு செய்தார். இதன்மூலம் வளரும் பருவத்திலேயே தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் பல நல்ல தலைமுறைகளை சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட முடியும் என்பதை உணர்ந்திருந்தார்.

இதற்காக நமச்சிவாயபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை பெற்று, தனது நட்பு வட்டாரம், பொது பங்களிப்பு உதவியுடன் உடலையும், மனதையும் உறுதியாக வைத்து கொள்ள உடற்பயிற்சி கூடம், யோகா, அறிவுத்திறனை வளர்த்து கொள்ள கல்வி, உளவியல், வரலாற்று பதிவுகள், பாட புத்தகங்கள், பொது அறிவு, இசை போன்றவற்றை உள்ளடக்கிய பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்டமான நூலகம் ஆகியவற்றை அமைத்துள்ளார் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு.

என்னதான் வேலை பளு இருந்தாலும் தான் ஏற்படுத்தி கொடுத்த நூலகத்துக்கு வரும் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு சிறுவர், சிறுமிகளுடன் அமர்ந்து புத்தகத்தை படிப்பதினால் ஏற்படும் நன்மையை விளக்கி வருகிறார். அதே போல் இசையால் மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது, அதனை கீ போர்டு மூலம் கற்று கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்துள்ளார். மேலும் அறிவு திறன், யோகா, உடற்பயிற்சியில் சிறந்து விளங்கும் சிறுவர், சிறுமிகளை உற்சாகப்படுத்தும் விதமாக இன்ப சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்பதை வாக்குறுதியாக அளித்துள்ளார். இதனால் உற்சாகம் அடைந்த சிறுவர், சிறுமிகளோ ஒன்றாக இணைந்து கோரஸ் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

அறியா பருவத்தின் போது செய்யும் குற்றத்திற்காக பல தண்டனைகளை பெற்று சிறார் சீர்திருத்தப்பள்ளி, சிறைக்கு செல்வதை தவிர்க்க, இளைஞர்களுக்கு வாழ்க்கையை வளப்படுத்தும் நல்ல பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தால் சமூகத்தில் பல சிறந்த தலைமுறைகளை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் உருவெடுத்திருக்கிறார் சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு...


Advertisement
2020-2023ஆம் ஆண்டுகளில் அரங்கேறிய ஆதாயக் கொலைகள் தொடர்பாக 12 பேரை கைது செய்த போலீசார்
படகில் நெருப்புப் பந்தத்துடன் சிலம்பம் ஆடிய அண்ணன், தங்கை
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! சென்னைக்கு இன்று கனமழை எச்சரிக்கை.!
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை
கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்.. விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தேங்கிய தண்ணீர்
கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கேரள சுற்றுலா பயணிகள்
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்க வாய்ப்பு..!
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரித்த 2 பேர் கைது
வரும் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்..! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்..?

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement