செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் தாய்க்கு உணவு தர மறுக்கும் மகன்... சொத்துக்களை மீட்டுத் தர கோரிக்கை!

Feb 17, 2021 02:06:47 PM

சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு உணவுக்கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தும் மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் வயதான தாய் ஒருவர் கண்ணீர் வடித்த சம்பவம் பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கமரியா பேகம். 72 வயது மூதாட்டியான இவர் தன்னுடைய கணவர் வெளிநாட்டில் இருந்து பொருளீட்டி அனுப்பிய பணத்தை கொண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியுள்ளார். பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டிடங்கள் கட்டியுள்ளார். இந்த நிலையில் பெற்றோரின் இறுதி காலம் வரை நன்கு பராமரிப்பதாக மகன் அளித்த வாக்குறுதியை நம்பிய கமரியா பேகம், தனது கணவர் பெயரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து சொத்துக்களையும் தனது மகன் அஜ்மீர் காஜா மைதீன் பெயரில் எழுதி வைத்துள்ளார். கோடிக்கணக்கான சொத்துகளைப் பெற்றுக்கொண்ட மகன் சொத்துகளை அள்ளித் தந்து வயதான காலத்தில் தள்ளாடும் தெய்வத்திற்கும் மேலான தாய் தந்தையரை தற்போது கொடுமைப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகனின் கொடுமையை தாங்கமுடியாமல் வயதான காலத்தில் ஊன்றுகோல் உதவியுடன் வந்த கமரியா பேகம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”எனது கணவர் மூலம் ஈட்டிய கோடிக்கணக்கான சொத்துகளை எங்களது ஒரே மகன் அஜ்மீர் காஜா மைதீன் பெயரில் எழுதி வைத்தோம். தற்போது கட்டிடங்களில் இருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 40 ஆயிரம் வாடகை வருவாய் வருகிறது. அதனை அனுபவித்து வரும் காஜா மைதீன் எங்களுக்கு ஒரு வேளை உணவு கூட அளிக்காமல் கொடுமைபடுத்தி வருகிறார். மேலும் நோயாளியான தனக்கும் தன்னுடைய கணவருக்கும் மருந்து மாத்திரைகள் கூட வாங்கி தர மறுக்கிறார்” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கோடிக்கணக்கான சொத்துக்களை தங்களை நம்ப வைத்து ஏமாற்றி கொடுமைப்படுத்தி வரும் மகன் அஜ்மீர் காஜா மைதீன் மீது நடவடிக்கை எடுத்து தங்களது சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க வயதான தாய் முறையிட்டார். ஆசை ஆசையாய் வளர்த்த மகன் கோடிக்கணக்கான சொத்துகளை பெற்றதும் தாய் தந்தைக்கு உணவுக் கூட கொடுக்காமல் நன்றி மறந்து கொடுமைப்படுத்திய சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement