செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் பல்வேறு திட்டங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

Feb 17, 2021 07:13:52 AM

ராமநாதபுரம் -தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் , பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவு ஆகியவற்றை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் பனங்குடியில் காவிரிப்படுகை சுத்திகரிப்பு ஆலைக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை சார்பில் தமிழகத்தின் மூன்று முக்கியத் திட்டங்களை, காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே 144 கிலோமீட்டர் நீளம் கொண்ட குழாய் மூலம் இயற்கை எரிவாயுத் திட்டம் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்படுகிறது. குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம் மூலம் வீடுகளுக்கும் உர தொழிற்சாலைகளுக்கும் வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

மணலியில் சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

நாகப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதன் திட்ட மதிப்பீடு சுமார் 31 ஆயிரத்து 580 கோடி ரூபாயாகும்.மேலும் பங்குதாரர்கள் மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், வருங்காலத்தில் மின்சாரம்,வீட்டுத் தேவைகள் போன்றவற்றுக்கான எரிபொருள் போதுமான அளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காணொலி வாயிலாக பிரதமர் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.


Advertisement
சுற்றுலாப் பயணி தவற விட்ட தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு
ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சிவகங்கை குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் இறந்த விவகாரத்தில் யானைப்பாகன் கைது
ராணிப்பேட்டையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தி 20 பேர் காயம்
நா.த. கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு
கொடி காத்த குமரனின் 121-வது பிறந்த நாள்... தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை
20 செ.மீ மழை பொழிவையும் எதிர்கொள்ள தயார் நிலை.. மாநகராட்சி ஆணையர்
பூக்கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி..
கொலை வழக்கில் கைதானவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு..!
ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement