சிறை தண்டனை முடிந்து பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் சசிகலா அதிமுக கொடியை கட்டி சென்றது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.