செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா தடுப்பூசி முகாம்... சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்

Jan 18, 2021 04:01:52 PM

தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி  போட்டுக்கொண்டார். 

நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. கோவேக்சின், கோவிசீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் போடப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 166 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மையத்திலும் நாள் ஒன்றுக்கு தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2-ம் நாளான இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கேவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என்றார்.

தடுப்பூசி என்பது இலக்கு சார்ந்த திட்டம் கிடையாது என்றும் பாதுகாப்பை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலுமே, முகக் கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியையும் பின்பற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement