செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...!

Jan 15, 2021 09:19:53 PM

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 686 காளைகளும், 600 வீரர்களும் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். 18 காளைகளை அடங்கிய வீரர் முதல் பரிசை வென்றார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு ஊர்களிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி காலையில் தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை சீறிப்பாய்ந்தது.

இதை தொடர்ந்து காளைகள் வரிசையாக அவிழ்ந்து விடப்பட்டன. வாடி வாசலை கடந்த வந்த காளைகளை வீர ர்கள் பாய்ந்து அடக்கினார். காளைகளை அடக்க போட்டி போட்டுக் கொண்டு காளையர்கள் களத்தில் வலம் வந்தனர்.

சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் துள்ளி பாய்ந்து சென்றன. சில காளைகள் பிடித்தவர்களை உதறி தள்ளி பாய்ச்சல் காட்டின. ஒரு சில காளைகள் களத்தில் நின்று விளையாடின.

காலையில் தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெற்ற போட்டியில் மொத்தம் 686 காளைகளும், 600 வீரர்களும் பங்கேற்றனர். இதில்
18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசை வென்றார். அவருக்கு காருடன் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன.

17 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.அவருக்கு ஒரு பவுன் தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. 10 காளைகளை பிடித்த மேட்டுப்பட்டி கார்த்திக்கிற்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

இதே போன்று யாருக்கும் சிக்காமல் சென்ற பாலமேட்டை சேர்ந்த யாதவா உறவின் முறையைச் சேர்ந்த காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அந்த காளையின் உரிமையாளருக்கு காங்கேயம் பசு கன்றுடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு வகுத்து தந்துள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement