செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

'இந்தியாவின் முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தமிழ் மன்னர் நடத்தியதுதான்!'- தி வீக் கட்டுரையில் தகவல்

Jan 09, 2021 01:31:45 PM

சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனால் நிர்மாணிக்கப்பட்ட, நீர்மயமான வெற்றித் தூணான 'சோழ கங்கம்' ஏரி பல வருடங்களுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டி கடல்போல காட்சியளிக்கிறது...

சோழ மன்னர்களில் புகழ் பெற்றவர் ராஜேந்திர சோழன். கி.பி 1025 ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றையும் மாற்றி எழுதியவர் இவர்.   வடக்கே கங்கை வரை படையெடுத்து வெற்றிகொண்டது மட்டுமல்லாமல் கடல் கடந்து இலங்கை, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா, சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளிலும் போர்கள் பல நடத்தி ராஜேந்திர சோழன் வெற்றி பெற்றான்.

வெளிநாட்டுக்கு படையெடுத்து சென்ற முதல் இந்திய மன்னர்  ராஜேந்திரன் சோழன்.  ராஜேந்திர சோழனின் கடற்படைகள் தொடுத்த திட்டமிட்ட, அதிரடியான, துல்லியத் தாக்குதல்களால்  விஜய சாம்ராஜ்ஜியத்தின் துறைமுகங்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன.  ராஜேந்திர சோழன் குறித்து 'தி வீக் ' இதழ் எழுதிய 'பெருங்கடவுளின் கடவுள் (  lord of ocean) என்ற  கட்டுரையில், ராஜேந்திர சோழனின் கடல் கடந்த தாக்குதல் தான், இந்தியாவின் முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (surgical strike)  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சங்க கால தமிழ் மன்னர்களான கரிகாலன் மற்றும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆகியோர் நிகழ்த்திக்காட்டிய வடநாட்டுப் படையெடுப்பை தன் காலத்திலும் வெற்றிகரமாக நிகழ்த்திய ராஜேந்திர சோழன், கங்கை வரை சென்று வெற்றி பெற்றதையடுத்து சோழநாட்டின் தலைநகரை  மாற்றினார். கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை நிர்மாணித்ததோடு மட்டுமல்லாமல், கங்கைகொண்ட சோழீசுவரர் எனும் காலத்தால் அழியாத கோயிலையும் எழுப்பி சோழகங்கம் எனும் பிரமாண்ட ஏரியையும் வெட்டினார். திருவாலங்காடு செப்பேடு ஒன்றில் சோழகங்கம் ஏரி பற்றி  ’சலமயமான சயத்தம்பம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சலமயமான சயத்தம்பம் என்றால் நீர்மயமான வெற்றித்தூண் என்பது பொருளாகும். 

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட சோழகங்கம் ஏரி தற்போது, பொன்னேரி என்ற பெயரில் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. சுமார் 824 ஏக்கர் பரப்பளவில் 4800 மீட்டர் நீளத்துக்கு அமைந்துள்ள சோழகங்கம் ஏரி மூலம் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவிலான வயல்வெளிகள் பாசனம் பெறுகின்றன.

ராஜேந்திர சோழன் காலத்தில் சோழகங்கம் ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டது. ஆனால், சமீப காலத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக ஏரிக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்தது. மேலும், ஏரியும் ஆக்கிரமிப்பு காரணமாகச் சுருங்கியது. இந்த ஏரியை  முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், ஏரி ஆக்கிரமிப்பு இன்னும் அகற்றப்படவில்லை. இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சோழகங்கம் ஏரி முழு கொள்ளளவான 114 கன அடியை எட்டி மறுகால் பாயத் தொடங்கியுள்ளது.  

நீண்ட காலத்துக்குப் பிறகு சோழகங்கம் கடல் போல நிரம்பிக் காட்சியளிப்பதால் கங்கைகொண்ட சோழபுரம் மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..!


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement