செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை...

Jan 09, 2021 06:23:32 AM

கொரோனா தடுப்பூசி அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளைமறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.

ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு, மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்துவதற்கான இரண்டாம் கட்ட ஒத்திகை நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் மொத்தம் 190 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இந்தப் பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் பார்வையிட்டதுடன், மத்திய அரசின் பொது மருத்துவ பொருட்கள் சேமிப்பு கிடங்கையும் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதாகவும், தமிழக அரசின் பணிகளை பிரதமர் மோடியும் பாராட்டி உள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே, தடுப்பூசி போடும் பணியை பல கட்டங்களாக அனைத்து மாநிலங்களிலும் நடத்துவது குறித்து காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார். நாளைமறுநாள் மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் தடுப்பூசி போடும் பணி தொடங்குவது எப்போது என்பது குறித்து பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement