சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வருகிற 27ஆம் தேதி விடுதலை ஆக வாய்ப்புள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2008ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இம்மாதம் 27 ஆம் தேதி, அவர், விடுதலையாக வாய்ப்புள்ளதால் அவரிடம் விளக்கங்கள் பெற்று பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.