நாமக்கல்லில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, ரூபாய் நோட்டுக்குள் வெள்ளை தாள்களை வைத்து ஏமாற்றிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வண்டிக்கார தெருவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம், சேந்தமங்கலத்தை சேர்ந்த பாஸ்கரன், மணிமாறன் ஆகியோர் தங்களுக்கு தெரிந்த நபர்களிடம் கணக்கில் வராத கருப்பு பணம் அதிகளவில் இருப்பதால், அதை மாற்றிக்கொடுத்தால், இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய வெங்கடேஷ், ஐந்தாயிரம் ரூபாயை கொடுத்தபோது, அதற்கு பதிலாக, நூறு ரூபாய் நோட்டு கட்டை கொடுத்துவிட்டு போலீஸ் வருவதாக கூறி அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து, வெங்கடேஷ் நோட்டுக்கட்டை பிரித்து பார்த்தபோது, மேல் மற்றும் அடிபகுதியில் ரூபாய் நோட்டுக்களும், நடுவில் வெள்ளை பேப்பர்கள் இருப்பது தெரியவந்தது.