செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

'எங்களை இப்படி துரத்தியடித்தால் நாங்கள் எங்கே போவோம்?' - கண்ணீர் விடும் இருளர் மக்கள்

Jan 04, 2021 09:18:13 AM

மலைப்பகுதியில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் குடிசை போட்டு தங்கியிருந்த இருளர் இன மக்களை அங்கிருந்து விரட்டியடித்ததால், தங்குமிடமில்லாமம் அந்த மக்கள் குழந்தை குட்டிகளுடன் தவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகேயுள்ள சிறுகுன்றம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏராளமான இருளர் இன மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வந்தனர். இதையடுத்து, வருவாய்த் துறையினர் அனுமதி பெற்று மலைப் பகுதியில் தார்ப்பாய் குடிசை போட்டு தங்கி இருந்தனர். இந்த மக்கள் காயார், மானாமதி, தையூர், கரும்பாக்கம், சென்னேரி, கருநீலம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் , கரி சூளை , செங்கல் சூளை, மரம் வெட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்தால் பெண்களுக்கு ரூ. 250 ஆண்களுக்கு ரூ. 400 வரை கூலி கிடைத்துள்ளது.

ஆனால், இந்த மக்களுக்கு தங்குவதற்கு நிரந்தரமாக எந்த இடமும் இல்லை. இதனால், சிறுகுன்றம் மலைப்பகுதியில் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் மக்கள் மலைப்பகுதியில் தார்ப்பாய் குடிசை போட்டு தங்கியிருந்தனர். ஆனால், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தற்காலிகமாக போடப்பட்ட தார் பாய்களை அகற்றியும் கிழித்து எரிந்தும் இருளர் இன மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், இருளர் மக்கள் மலைப்பகுதி இடத்தை விட்டு நகராமல் மறுத்து தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர்.

தொடர்ந்து, திருப்போரூர் போலீசார் இருவரிடமும் தரப்பினரிடத்திலும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அரசு அதிகாரிகளிடத்தில் இருளர் இன மக்கள் தங்கள் குறைகளை வேதனையுடன் தெரிவித்தனர்.

இருளர் இன மக்கள் கூறுகையில் , '' நாங்கள் தான் படிப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறோம். எங்கள் குழந்தைகளாவது  படிப்பதற்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அதிகாரிகளிடத்தில் முறையிட்டாலும் பலனில்லை. மரம் வெட்டுவது, செங்கல் சூளை, அடுப்புக்கரி சூளை போன்ற பணிகளை தவிர வேறு எந்த வேலையும் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு எந்த வசதியும் செய்து தராமல் துரத்தியடித்தால் நாங்கள் குழந்தை குட்டிகளுடன் எப்படி வாழ்வது '' என்று கண்ணீர் மல்க  கூறுகின்றனர்.


Advertisement
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement