செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சென்னை பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பில் 1,152 வீடுகள் கட்டும் திட்டம்... பிரதமர் அடிக்கல் நாட்டினார்...

Jan 01, 2021 01:43:32 PM

சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் 116 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டப் பணிகளுக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். 

இந்தூர், ராஜ்கோட், சென்னை, ராஞ்சி, அகர்தாலா, லக்னோ ஆகிய 6 நகரங்களில் எல்ஹெச்பி வீட்டு வசதித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழகம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், திரிபுரா முதலமைச்சர்களின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்தகைய திட்டங்களில் மத்திய அரசுடன் கூட்டாக செயல்படுவதில் தமிழக அரசு மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 6 திட்டங்களும், நாட்டின் வீட்டு வசதித் திட்டங்களுக்கு புதிய வழியை காட்டும் என்றும், மத்தி-மாநில அரசுகளின் கூட்டுறவுக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, எல்ஹெச்பி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் 116.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப முறையானது, தரமான கட்டுமானம், மாறுபட்ட தட்பவெட்ப நிலைகளை எதிர்கொள்வது, சுற்றுசூழலுக்கு உகந்த, நீடித்த மற்றும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வல்லமையோடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டப் பகுதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் துணை மின்நிலையமும் கொண்டிருக்கும். சென்னை மாநகரின், நதிக்கரைகள் மற்றும் இதர ஆட்சேபகரமான பகுதிகளில் வாழும் நகர ஏழை குடும்பங்கள் மற்றும் குடிசைப்பகுதி வாழ் குடும்பங்களுக்கு இக்குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் முடிவுற்றவுடன் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement