செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஒரு நாள் தியானம்.. இளையராஜா ஆப்சென்ட்

Dec 28, 2020 06:15:38 PM

சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில், இளையராஜா 40 ஆண்டுகாலம் இசைக்கூடமாக பயன்படுத்திய அறை தகர்க்கப்பட்டு விட்டதாகவும், இதனால் மனம் உடைந்த இளையராஜா நீதிமன்றம் அனுமதித்திருந்தும் அங்கு வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த காலம் தொட்டு, சுமார் 40  ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவை பயன்படுத்தி வந்த  இளையராஜா அதற்காக வாடகை கொடுத்தது கிடையாது என்று கூறப்படுகின்றது.

ஆனால் இளையராஜா இசை அமைக்கும் படத்தின் தயாரிப்பாளர்களிடம், கட்டணம் வசூலித்து பிரசாத் ஸ்டூடியோ வருமானம் ஈட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. 

ஸ்டுடியோ நிர்வாகம் உரிமையாளர் ரமேஷ் பிரசாத்திடமிருந்து மகன் சாய் பிரசாத் கைக்கு வந்த பிறகு, இளையராஜா பயன்படுத்தி வந்த இசைக் கூடம் உள்ளிட்ட ஒரு தளம் முழுவதையும் மென்பொருள் நிறுவனம் ஒன்றிற்கு  வாடகைக்கு விட  முடிவு செய்துள்ளார்.

நகரின் பிரதானமான பகுதியில் பெரும் வாடகை ஈட்டித் தரக்கூடிய அந்த இடத்திற்கு, இளையராஜாவிடம் இருந்து உரிய வாடகையை பெற முடியவில்லை என்ற நிலையிலேயே சாய் பிரசாத் அவ்வாறு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிராக இளையராஜா நீதிமன்றம் சென்ற நிலையில், தங்கள் நிறுவன இடத்தை இளையராஜா அபகரிக்க முயற்சிக்கிறார் என்ற அடிப்படையில் பிரசாத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் தங்களது இடம் என்ற வகையில், இளையராஜா பயன்படுத்திய அறையில் இருந்த பொருட்களை எடுத்து வேறு ஒரு இடத்தில் குவித்து வைத்ததோடு, அந்த அறையின் ஒரு பகுதியையும் இடித்துள்ளனர்.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு சென்று, சமரச அடிப்படையில் இளையராஜா இன்று ஒரு நாள் மட்டும் தனது இசைக்கூடத்திற்கு சென்று தியானம் செய்யவும், பொருட்களை எடுத்துக் கொள்ளவும் உயர்நீதிமன்றம் அனுமதித்தது. இளையராஜா இன்று பிரசாத் ஸ்டூடியோ வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் மன அழுத்தத்தில் இருப்பதால் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement