செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பூஜ்யம் கல்வி ஆண்டா? முதலமைச்சருடன் பேசி முடிவு..!

Dec 26, 2020 04:54:19 PM

பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டைப் பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காராப்பாடி, பொலவாபாளையம் ஊராட்சிகளில் பேவர் பிளாக் தளம், வடிகால் வசதி, கான்க்ரீட் தளம் அமைக்கும் பணிகளைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.

120 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கியதுடன் சவாக்காட்டுப்பாளையத்தில் அம்மா கிளினிக்கையும் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறக்காத நிலையில் இந்த ஆண்டைப் பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார். 

கொரோனா சூழலால் தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. உருமாற்றம் அடைந்த வீரியமிக்க கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருவதால் இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படுமா என்னும் ஐயம் உள்ளது. பள்ளிகள் திறக்காத நிலையில், அந்தந்த வகுப்புகளுக்கான கற்றல் அடைவுகளை அடையாமல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றினால் கல்வித் தரம் பாதிக்கப்படும் எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

அதன்படி இந்தக் கல்வியாண்டை முற்றிலும் கைவிடுவதே பூஜ்யம் கல்வியாண்டு எனப்படுகிறது. அவ்வாறு பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்பட்டால் கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் படித்த மாணவர்கள், இந்த ஆண்டில் எந்த வகுப்பும் படித்ததாகக் கருதப்படாது. அவர்கள் அடுத்த 2021 - 2022 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்புக்குத் தான் செல்வார்கள்.

அதேபோல் இந்தக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள், அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள் என ஒன்றாம் வகுப்பில் மட்டும் வழக்கத்தை விட இருமடங்கு மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் சூழல் உருவாகும். ஆனால் பூஜ்யம் கல்வி ஆண்டு தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு தற்போது வரை முடிவெடுக்கவில்லை.


Advertisement
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல புதிய நடைமுறை
சுருளி அருவிக்கு அருகே நடைபெறும் சாரல் விழா 2024 - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!
செந்தில் பாலாஜி அன்று ஊழல்வாதி, இன்று தியாகியா..? : எச்.ராஜா கேள்வி
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு
பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்..!
அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. சோதனையில் வசமாக சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.. கணக்கில் வராத ரூ.1.14 லட்சம் பறிமுதல்
ஆபரேஷன் அகழியில் சிக்கிய பெண்.. 70 சவரன் நகைகள், ரூ.19 லட்சம் பறிமுதல் செய்து போலீஸ் அதிரடி

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement