செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

இளையராஜா தன்னை விட அதிகமாக நேசித்த இடம்: உள்ளே அனுமதிக்கவே முடியாது என பிரசாத் ஸ்டூடியோ பிடிவாதம்

Dec 21, 2020 04:58:27 PM

பிரசாத் ஸடூடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக சாலி கிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில்தான் பாடல்களை ரிக்கார்டிங் செய்து வந்தார். இங்கே, அவருக்கு தனியாக ரிக்கார்டிங் தியேட்டர் இருந்தது. கிட்டத்தட்ட 6,000 பாடல்களை இந்த ஸ்டூடியோவில் இருந்துதான் இளையராஜா இயற்றியுள்ளார். தன் வீட்டை விட அதிகமாக நேசித்த இந்த இடத்தை கிட்டத்தட்ட ஒரு கோயில் போலவே இந்த ஸ்டூடியோவை இளையராஜா கருதி வந்தார்.

இந்த நிலையில்தான், பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் தரப்பில் இந்த இடத்தை விற்கப்போவதாக கூறி இளையராஜாவை காலி செய்ய கூறியுள்ளனர். தான் கோயில் போல கருதி வந்த இடத்தை காலி செய்ய சொன்னதால் இளையராஜா அதிர்ந்து போனார். இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா தலைமையில் நடிகர்கள், இயக்குநர்கள் போராட்டம் கூட நடந்தது. ஆனால், பிரசாத் ஸ்டூடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் கொஞ்சம் இறங்கி வரவில்லை.

இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் மேலும், ஒரே ஒரு நாள் மட்டும் அந்த இடத்தில் தியானம் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சுமார் 40 ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த இடத்தில் இளையராஜாவை ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளவும் சில மணி நேரங்கள் தியானம் செய்து கொள்ளவும் அவருக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பதிலளிக்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரசாத் ஸ்டுடியோ தரப்பு , பொருட்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிகளவில் கூடி விடுவார்கள் என்பதால் அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் நியமிக்கப்படும் ஆணையர் , இளையராஜா மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் ஸ்டுடியோவுக்குள் சென்று பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது தொடர்பாக விளக்கமளிக்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement