செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வாங்கிய லஞ்சத்துக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்... கலெக்டர் அலுவலகத்தில் வேலையில் சேர போனவர்களுக்கு என்ன நடந்தது?

Dec 03, 2020 11:30:45 AM

ஈரோடு அருகே பட்டதாரி இளைஞர்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் அரசுப் பணி வாங்கிக் கொடுப்பதாகக் கூறி  ரூ. 1 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

 ஈரோடு அருகேயுள்ள மரப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் பாலச்சந்தர். பாலச்சந்தரும் அவரின் நண்பர்கள் சிலரும் பட்டதாரி இளைஞர்களிடத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறையில் பணியிடங்கள் காலியாகவுள்ளது. தங்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகளிடத்தில் செல்வாக்குள்ளது. எனவே, பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியுள்ளனர். குறிப்பாக அப்பாவியான இளைஞர்களை குறி வைத்து இந்த கும்பல் மூளைச்சலவை செய்துள்ளது. இந்த கும்பலின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏராளமான இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்களுக்கு தமிழக அரசு முத்திரையுடன் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரையும் பாலச்சந்தர் கொடுத்து, உடனடியாக பணியில் சேருமாறு கூறியுள்ளார். சொன்ன வார்த்தை தவறாமல் நடந்த பாலச்சந்தருக்கு அப்பாயின்ன்ட்மென்ட் ஆர்டர் பெற்ற இளைஞர்கள் நன்றியும் தெரிவித்தனர்.

அரசு வேலை எளிதாக கிடைத்த மகிழ்ச்சியில் அந்த அப்பாவிகள் துள்ளிக்குதித்தனர். பின்னர், பாலச்சந்தர் கொடுத்த அப்பாயின்ட் மென்ட் ஆர்டருடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறையில் பணியில் சேர சென்றனர். அப்போதுதான், தங்களிடம் பாலச்சந்தம் கொடுத்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்கள் போலியானவை என்பது அந்த இளைஞர்களுக்கு தெரிய வந்தது. தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் , பாலச்சந்தரின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீடு பூட்டி கிடந்துள்ளது. பாலச்சந்தர் தன் தந்தை சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். அதே போல, பாலச்சந்தரின் நண்பர்களும் காணாமல் போய் விட்டனர். அரசு வேலை கிடைக்கும் என்று எண்ணி லஞ்சம் கொடுத்தவர்கள் இப்போது நொந்து போய் கிடக்கிறார்கள். பாலச்சந்தர் கும்பல் சுமார் 59 பேரிடத்தில் ஒரு கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்தில் நேற்று புகாரளித்தனர். தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement