செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

"புரெவி"வெள்ளி அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் : தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Dec 02, 2020 04:52:37 PM

புரெவி புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும், இதன் காரணமாகத் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் புரெவி புயல் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இது இன்று பகல் பதினொன்றரை மணி நிலவரப்படி பாம்பனுக்குக் கிழக்கு தென்கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்குக் கிழக்கு வடகிழக்கே 550 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்காக நகர்ந்து இன்று இரவுக்குள் இலங்கையின் திரிகோணமலைக்கு அருகில் கரையைக் கடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இது நாளைக் காலை மன்னார் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதியில் நிலவும் என்றும், நாளை நண்பகல் வாக்கில் பாம்பனுக்கு மிக அருகில் வரும் என்றும், அதன்பின் மேற்கு தென்மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வியாழன் இரவு முதல் வெள்ளி அதிகாலைக்குள் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

நாளை கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக் கூடும் என்றும், வெள்ளியன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழை வரை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

வட தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நாளை ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தென் தமிழகம், தென் கேரளப் பகுதிகளில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரம், கேரளக் கடலோரப் பகுதிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement