செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருத்தணியில் வழிபட்டு வேல் யாத்திரையை தொடங்கினார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

Nov 06, 2020 01:51:05 PM

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், திருத்தணி முருகன் கோவிலில் வழிபட்டு வேல் யாத்திரையை தொடங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து, முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக பா.ஜ.க. சார்பில் வெற்றிவேல் யாத்திரை அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

இருப்பினும் தடையை மீறி யாத்திரை செல்ல உள்ளதாக தெரிவித்த தமிழக பாஜக தலைவர், யாத்திரைக்கு கடவுள் முருகன் அனுமதி வழங்கியதாகக் கூறினார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தில் பின்னணியில் இருப்பது மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.

பின்னர் சென்னை கோயம்பேட்டில் இருந்து பிரச்சார வேனில் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் திருத்தணி புறப்பட்டுச் சென்றனர். கோயம்பேடு பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வழியில், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில், பாஜகவினர் வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், எல்.முருகன் வாகனம் மட்டும் செல்ல அனுமதித்தனர். சுமார் 300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

இதனிடையே, வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் சென்னை ரெட்டேரி சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரம்பூர், கோயம்பேடு, செங்குன்றம், மாதவரம் செல்லும் ஆகிய 4 வழிகளிலும் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருத்தணிக்கு வேலுடன் சென்ற எல்.முருகன், அங்கு முருகன் கோவிலில் வழிபட்டு தமது யாத்திரையை தொடங்கினார். இந்த நிகழ்வில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

திருத்தணியில் அசம்பாவிதங்களை தவிர்க்க டிஐஜி சாமுண்டீஸ்வரி மற்றும் ஐ.ஜி.நாகராஜன் தலைமையில் திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

எல்.முருகன் வாகனம் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிவிட்டதோ என குழப்பம் எழுந்தது. ஆனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அதேசமயம் திருத்தணிக்கு வழிபடச் செல்வதாகக் கூறியதால் எல்.முருகனுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். திருத்தணி மட்டுமல்ல அறுபடை வீடுகளுக்கும் வழிபாடு நடத்த தடையில்லை என்றும், ஆனால் வேல் யாத்திரை என்ற பெயரில் பேரணியாகவோ கூட்டமாகவோ செல்ல அனுமதிக்கப்படாது என்றும் போலீசார் கூறியுள்ளனர். 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement