செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திண்டுக்கல் : நெருங்கும் தீபாவளி... ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு ஆட்டு கிடாக்கள் விற்பனை

Nov 05, 2020 10:53:28 AM

தீபாவளிபண்டிகையை முன்னிட்டு வேடசந்தூர் அருகேயுள்ள ஆட்டுச்சந்தையில் ரூ1.5 கோடிக்கு ஆட்டுக்கிடாக்கள், கோழிகள் விற்பனையாகின.

திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சந்தையாக அய்யலூர்ஆட்டுச் சந்தை உள்ளது. இந்த சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடக்கும். அய்யலூர் மட்டுமல்லாமல், அதைச்சுற்றியுள்ள வடமதுரை, கடவூர், எரியோடு,காணப்பாடிஉள்ளிட்டகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, கோழிகளை விற்பனை செய்ய இந்த சந்தைக்குக் கொண்டு வருவார்கள்.

திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்துஆடுகளை வாங்கி சென்றனர். காலை 5 மணிக்கு தொடங்கி 9 மணிவரையில் இந்த சந்தை நடைபெறும். பண்டிகைக்காலங்களில்இரவு 7 மணிவரைகூட சந்தை தீவிரமாக இயங்கும். குறைந்தபட்சம் ரூ 60 லட்சம் அதிகபட்சம் 1 கோடிரூபாய் வரையில் விற்பனைநடக்கும் .வரும் நவம்பர் 14- ஆம் தேதி தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்பட விருப்பதால், இன்று ஆடு , கோழிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. ஆடு,கோழிகளை வாங்கிச் செல்ல இன்று சந்தையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதன் காரணமாக, இன்று ஒரேநாளில் மட்டும் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனையானது.

தீபாவளி சமயத்தில் இறைச்சிக்கான தேவை அதிகமாக இருக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாக்கள் விற்பனையானது. ஆட்டுக்கிடாக்கள் ரூ.5000 முதல் 20,000 வரை விற்பனையாகின. நாட்டுக்கோழிகள் கிலோவுக்கு ரூ.450 முதல் விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement