செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அரசு அலுவலங்களில் பிரதமர் மோடி புகைப்படம்! - பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம்

Oct 23, 2020 01:37:07 PM

புதுக்கோட்டையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள்  பாரதிய ஜனதா கட்சியினர் புகைப்படங்களுடன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனாலும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, இன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மோடியின் புகைப்படங்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள்ளே சென்றனர். அவர்களிடத்தில் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் பாஜக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசு ஆணையின் படி பாரத பிரதமரின் புகைப்படத்தை அனைத்து அரசு அலுவலகத்திலும் வைக்க வேண்டும் என அரசு அதிகாரிகளிடத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் வலியுறுத்தினர்.  மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து விவாதித்து,  இரண்டு நாட்களில் முடிவை தெரிவிப்பதாக கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி உறுதி கூறியதையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் கலைந்து சென்றனர்.

இன்னும் இரண்டு நாட்களில் பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.


Advertisement
டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!
தஞ்சை உள்ளிட்ட மாவட்ட வீடுகளில் தொடர் கொள்ளை.. தனிப்படை போலீஸாரால் திருடர்கள் கைது..
துணைவேந்தர் இன்றி சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழா
ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக நீர் நிலையை உருவாக்கலாம் - பசுமைத் தீர்ப்பாயம்
தமிழகத்தில் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் செயல்படவில்லை என புகார்.. ஊடகங்களில் செய்திகள் வெளியானாலாவது தீர்வு கிடைக்குமா?-நீதிபதிகள்
சிதம்பரத்தில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு..
புத்தகப்பையில் அரிவாளை எடுத்து வந்த மாணவர்.. தந்தையை அழைத்து டி.சி கொடுத்த பள்ளி நிர்வாகம்
குமரி மாவட்டத்தில் காணாமல் போன 1,000 செல்போன்கள் மீட்பு...
திருக்குவளையில் கலைஞர் இல்லத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்..
மாணவர்கள் காலணியுடன்செல்வதால் வகுப்பறை குப்பையாவதாக புகார்.. சுத்தம் செய்த மேயர் சுந்தரி..

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...


Advertisement