செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் துண்டிக்கப்பட்டு கிடந்த மனிதகால்: பொதுமக்கள் அதிர்ச்சி

Oct 14, 2020 02:55:22 PM

கடலூரில் வள்ளி விலாஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட நோயாளியின் கால் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் மனித கால் ஒன்று துண்டிக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், அங்கு கிடந்தது மேல்புவனகிரியை சேர்ந்த கணபதி என்பவரின் கால் என்பது தெரியவந்தது.

சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுக்க கடந்த மாதம் அவர், வள்ளி விலாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய்த் தீவிரம் காரணமாக கணபதியின் வலது காலை துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வள்ளி விலாஸ் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அவரது கால் அகற்றப்பட்டுள்ளது. இந்த காலை முறையாக அப்புறப்படுத்தாமல், மருத்துவமனை ஊழியர்கள் சிலர், கெடிலம் ஆற்றின் கரையில் அலட்சியமாக வீசிச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த காலை எடுத்து வெறும் ஒரு அடிக்கு மட்டும் பள்ளம் தோண்டி புதைத்துச் சென்றனர்.

ஆற்றின் ஓரம் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கே தடை உள்ளது. ஆனால் வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர், மனித உடல் பாகத்தை அங்கு வீசிய நிலையில் பிரச்சனை ஆனதும் அதனை அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.

இதனை ஏற்க மறுக்கும் அப்பகுதி மக்கள் அந்த காலை மீண்டும் தோண்டி எடுத்து முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் மனித உடல் பாகத்தை ஆற்றங்கரையோரம் வீசிய வள்ளி விலாஸ் மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Advertisement
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement