செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

'எனக்கு பொண்ணு தர மாட்டியா?'- காதலித்த பெண்ணின் தாயை வெட்டிக்கொலை செய்த 38 வயது லாரி டிரைவர்!

Oct 07, 2020 12:55:59 PM

கோபிசெட்டிபாளையத்தில் மகளை திருமணம் செய்துதர மறுத்த தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பெரியமொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி. இவரின் கணவர் தமிழ்தாசன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 5 மகள்கள் உண்டு. மூத்த மகள்கள் இரண்டு பேருக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. மேரி அந்த பகுதியில் தள்ளுவண்டியில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். மேரியின் திருமணமாகாத மூன்று மகள்களும் தாசம்பாளையத்தில் உள்ள தனியார் நுற்பாலையில்  வேலை பார்த்து வந்தனர்.

நேற்றிரவு மேரியின் வீட்டுக்கு இரண்டாவது மகள் அன்னமேரி தன் கணவருடன் வந்திருந்தார். மூன்று பேரும் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் அங்கு இரு சக்கரவாகனத்தில் வந்த முருகன் என்பவர் , 'உன் மகளை எனக்குக் கல்யாணம் செய்து தர மறுக்கிறாயா?' என்று கத்தியவாரே அரிவாளை எடுத்து மேரியை வெட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் முருகனைத் தடுக்க முயன்றனர். இதில், கணேசன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. மேரியும் கணேசனும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து, அங்கிருந்து முருகன் தப்பி ஓடி விட்டார். கோவை மருத்துவமனையின் சிகிச்சை பலனின்றி மேரி இறந்து போக, கணேசனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

வழக்குப்பதிவு செய்த கோபிச்செட்டி பாளையம் காவல்துறையினர் தப்பி ஓடிய முருகனைத் தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், பர்கூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது முருகன் லாரி டிரைவராக வேலை பார்த்துள்ளார். மேரியின் 19 வயது மகளை கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தலையாகக் காதலித்தும் வந்துள்ளார். மேரியிடம் பெண் கேட்டு சென்ற போது, அவர் கொடுக்க மறுத்ததால், இந்த கொலை நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது.


Advertisement
கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!
திருமலைக்கு படிக்கட்டு பாதை வழியாக வரும் 'நீரிழிவு, சுவாசப் பிரச்சனைகள், இதய நோய் உள்ளவர்கள் நடந்து செல்வதை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்
சேலம் மாநகராட்சி மேயர் தலைமையில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்த கவுன்சிலர்கள்
திருநெல்வேலியில் மார்பக புற்றுநோயை வென்றோரின் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
சென்னை, அடையாரில் மெட்ரோ ரயில் பணிகள் சோதனையால் வரும் 26, 27 நாட்களில் போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி குளச்சல் பகுதி கால்வாயில் வெள்ளப்பெருக்கு.. கரை உடைந்து தண்ணீர் குடியிருப்புகுள் சூழ்ந்த வெள்ளம்..
தூத்துக்குடியில் பெண்களுக்கான பிங்க் பூங்கா திறந்து வைத்தார் எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன்.
சேலம் ஆத்தூர் பகுதியில் பொதுப்பாதையைப் பயன்படுத்துவது பிரச்சனையில் கொலை செய்த நபரை போலீசார் கைது
விழுப்புரம் எஸ்.பி.யைக் கண்டித்து சி.வி.சண்முகம் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது
ஓசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழப்பு

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement