செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பதவி போட்டியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை - புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!

Oct 05, 2020 03:11:43 PM

பதவிப் போட்டியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மணிகண்டன். இவர், நேற்றிரவு 11 மணியவில் இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, நெல்லித்தோப்பு சந்தையருகே, 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உருளையன்பேட்டை போலீசார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மணிகண்டன் உயிரழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கொலை வழக்குப் பதிவு செய்த உருளையன்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மணிகண்டனுக்கும் அவரின் உறவினரான ஆட்டுப்பாட்டியைச் சார்ந்த ராஜசேகர் என்பவருக்கும் ரசிகர் மன்றத்தில் தலைவர் பதவியை யார் வகிப்பது என்பது குறித்து பிரச்னை இருந்துள்ளது. இதனால், ராஜசேகர் விஜய் சேதுபாதிக்காக தனியாக ரசிகர் மன்றம் நடத்தி வருகிறார். ஆனால் ராஜசேகர் மன்றத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. மணிகண்டன் மன்றத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இருவரையும் சமாதானப்படுத்த நண்பர்கள் முயன்றனர். அப்போது, ராஜசேகர் தலைவர் பதவியை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு மணிகண்டன் ஒத்துக் கொள்ளாமல் அவர்களை மிரட்டிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால், மணிகண்டனை ராஜசேகர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிப் படுகொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.

தற்போது, ராஜசேகர் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Advertisement
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement