செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு... ம.பி.,யை சேர்ந்த 3 வழிப்பறிக் கொள்ளையர்கள் சிக்கினர்..!

Oct 02, 2020 08:49:15 AM

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட செல்போன்களை, துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற கும்பல் மத்தியப் பிரதேசத்தில் பிடிபட்டது. அவர்களிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் தயாரான, 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரி மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டன.

அந்த லாரி ஆகஸ்ட் 26 தேதியன்று ஆந்திர மாநிலம் நகரி அருகே சென்றபோது, மற்றொரு லாரியில் வந்து இடைமறித்த கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி ஓட்டுனரை மிரட்டி, மொத்த செல்போன்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்விற்கு 2 வாரங்களுக்கு முன்னதாக, கர்நாடக எல்லையை ஒட்டிய பாலமனெர்(Palamaner) பகுதியிலும், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலும் இதேபோன்று கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றதும், அதில் மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டு இருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதைதொடர்ந்து, தனிப்படை போலீசார் உடனடியாக தேவாஸுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

உள்ளூர் போலீசாருடன் இணைந்து நடத்திய விசாரணையில், அங்குள்ள கஞ்சர்பட்ஸ் எனும் கொள்ளைக் கும்பல் மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி, தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களுக்குள் பூட்டை உடைத்து நுழைந்து, அதிலுள்ள பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்த கும்பலை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார், அவர்களது வங்கிப் பரிவர்த்தனைகளையும் ஆராய தொடங்கினர். இதன்மூலம் செல்போன்களை கொள்ளையடித்தது கஞ்சர்பட்ஸ் கும்பல் தான் எனவும், கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு கடப்பா, பெல்லாரி வழியாக அவர்கள் மகாராஷ்டிராவை அடைந்ததும் உறுதி செய்யப்பட்டது.

விசாரணையை தீவிரப்படுத்தியதில், மகாராஷ்டிராவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராம் காட் என்பவனின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது உறுதிபடுத்தப்பட்டது.

இதையடுத்து, ராம் காட், ரோஹித் ஜல்லா, அங்கித் ஜான்ஜா ஆகியோரை கைது செய்த போலீசார், புனேவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், 2 ட்ரக்குகள், ஒரு கார், 4 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றிய போலீசார், கொள்ளையில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டோரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கைதான நபர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு எந்தெந்தக் கொள்ளை சம்பவங்களில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது என்பது விசாரணைக்குப் பின் தெரிய வரும் என ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement